ATTENTION READERS: As a personal tribute to writer Pa. Singaram, English translation of his epic novel "Puyalile Oru Thoni" (புயலிலே ஒரு தோணி) is being published in serialized form in this blog.

Friday 24 March 2023

எங்கிருக்கிறாய் என் தோழியே? (Friend) by Rabindranath Tagore

காதலைத் தேடி

கடல் கடந்து சென்றாய். 

கண்காணாத இடம் ஒன்றில்

களைத்து நிற்கிறாயோ? 

புயல் வீசும் இந்த நள்ளிரவில்

எங்கிருக்கிறாய் என் தோழி?

இன்றிரவு

என்னால் தூங்க முடியவில்லை. 

நினைவுகள் அழுந்த

என்னை நிந்திக்கும் இரவுகளில்

உனக்காக என் கதவுகளைத்

நான் திறந்து வைத்துக்கொண்டுதான்

இருக்கிறேன். 

நீ இன்னும் என்னிடம்

வரவில்லை. 

உன்னையன்றி எதுவும் என்

நினைவில் இல்லை.

என்னிடம் வரும் வழியை

நீ தவறவிட்டு விட்டாயோ! 

ஒருவேளை

இருளில் கருத்துப்போன

மங்கிய ஆற்றங்கரையோரமாக

அரவம் பார்த்து குரைத்தடங்கும்

காட்டின் ஓரமாக

அடி மனதின் ஆழத்தில் இருந்து 

வியாப்பிக்கும்

சோகம் கப்பிய முகத்துடன்

என்னை நோக்கி நீ

வந்து கொண்டிருக்கிறாயோ தோழி?

___________________

Source: Rabindranath Tagore’s poem “Friend”

In Tamil Translation: Saravanan. K

 

No comments:

Post a Comment

Drop your message here...

Name

Email *

Message *